Wednesday, February 13, 2013

பிச்சிடுவேன்....பிச்சி....- குட்டி கதை

பயந்து கொண்டே தன் மேனேஜர் அறையை திறந்தார் செந்தில் இன்னிக்கு என்ன இருக்குமோன்னு .

"என்ன ஆர் எஸ் சார் ! உங்களுக்கு எத்தனைதரம் சொல்றது. அந்த கிளையன்ட் இதயம் மோட்டோர்ஸ் பைல க்ளோஸ் பண்ண ஒரு வாரம் ஆச்சா!" சிம்ம த்வனியில் சீறினார் மேனேஜர் பாலன்.

"இல்ல சார் அது வந்து......"

"எனக்கு excuse எல்லாம் வேண்டாம்.....பிடிக்காததுன்னு தெரியும் இல்ல...."

செந்தில்லுகு என்ன பேசுவதுன்றே தெரியவில்லை. இது இருபதாம் முறை.

போன் அடித்தது. வீட்டு நம்பரை பார்த்த சிங்கம் உடனே பூனையாகியது.

" சொல்லும்மா! காலையிலேயே பசங்கள ஸ்கூல் வாசல்ல டிராப் பண்ணிட்டேனே.....சரிம்மா... சரிம்மா....சாயங்காலம் கூட்டிட்டு வரேன். இன்னிக்கி சரி பண்ணிடலாம். வேற ஒன்னும் இல்லையே....சரி வெச்சிடறேன்...."

"உங்களுக்கு கம்ப்யூட்டர் ரிப்பேர் வரும்னு சொன்னிங்களே! வீட்டுல கம்ப்யூட்டர் வொர்க் ஆகல. சாயங்காலம் வீட்டுக்கு போயி பாத்துட்டு போலாம்" மீண்டும் சிங்கம்.

மாலை 6 மணி. பாலா வீட்டை திறந்துகொண்டு முதலில் உள்ளே நுழைய கூடவே செந்திலும்.

"வா பாலா! என்ன இவ்ளோ லேட்....இங்க ஒருத்தி வீட்டுல இருக்கேன்னு தெரியாதா!" ஹாலில்ருந்து அதட்டினாள் ஹேமா.

"இல்லம்மா....கொஞ்சம் லேட் ஆச்சி" மெதுவாய் பாலா ஹாலுக்கு செந்திலுடன் நகர்ந்தார்.

"வாங்க சார்! வாங்க சார்!....பாலா....என்ன சும்மா நின்னுகிட்டு இருக்க...போய் சேர் கொண்டு வா.....என்னோட கம்ப்யூட்டர் சார் இவர்....செந்தில் சார் காபி......."

"பாலா....அப்படியே ஒரு காபி போட்டுட்டு வா...." சத்தமாய் கத்தினாள் ஹேமா.

No comments:

Post a Comment