Monday, February 18, 2013

காதலர் தினம் - குட்டி கதை


குட்டி கதை - காதலர் தினம் 
----------------------------------------------
கடந்த ஒரு மாதமாய் வித விதமாய் யோசித்து, பல "மாம்ஸ், மச்சான்ஸ்" கூட பேசி, அங்க இங்கன்னு காசெல்லாம் சேத்து அற்புதமான gift வாங்கினான் ஷ்யாம். ஒரு நிம்மதி பெருமூச்சி.

அடுத்த நாள் காதலர் காதலர் தினம். 10 மணிக்கு நிஷாவ அவ ஆபீஸ் வாசல்ல பாத்து... . 

"இன்னிக்கி என் மனச உன்கிட்ட ஓபன் பண்றேன் நிஷா. இந்தா...என்னோட காதல் சின்னம் உனக்கு...."

டக் என நிஷா மனதில் ஒரு rewind பட்டன் press.

"இவன் எப்படி 3 வருஷம் முன்னால மகேஷ் சொன்ன அதே டயலாக் சொல்லறான்."

Wednesday, February 13, 2013

பிச்சிடுவேன்....பிச்சி....- குட்டி கதை

பயந்து கொண்டே தன் மேனேஜர் அறையை திறந்தார் செந்தில் இன்னிக்கு என்ன இருக்குமோன்னு .

"என்ன ஆர் எஸ் சார் ! உங்களுக்கு எத்தனைதரம் சொல்றது. அந்த கிளையன்ட் இதயம் மோட்டோர்ஸ் பைல க்ளோஸ் பண்ண ஒரு வாரம் ஆச்சா!" சிம்ம த்வனியில் சீறினார் மேனேஜர் பாலன்.

"இல்ல சார் அது வந்து......"

"எனக்கு excuse எல்லாம் வேண்டாம்.....பிடிக்காததுன்னு தெரியும் இல்ல...."

செந்தில்லுகு என்ன பேசுவதுன்றே தெரியவில்லை. இது இருபதாம் முறை.

போன் அடித்தது. வீட்டு நம்பரை பார்த்த சிங்கம் உடனே பூனையாகியது.

" சொல்லும்மா! காலையிலேயே பசங்கள ஸ்கூல் வாசல்ல டிராப் பண்ணிட்டேனே.....சரிம்மா... சரிம்மா....சாயங்காலம் கூட்டிட்டு வரேன். இன்னிக்கி சரி பண்ணிடலாம். வேற ஒன்னும் இல்லையே....சரி வெச்சிடறேன்...."

"உங்களுக்கு கம்ப்யூட்டர் ரிப்பேர் வரும்னு சொன்னிங்களே! வீட்டுல கம்ப்யூட்டர் வொர்க் ஆகல. சாயங்காலம் வீட்டுக்கு போயி பாத்துட்டு போலாம்" மீண்டும் சிங்கம்.

மாலை 6 மணி. பாலா வீட்டை திறந்துகொண்டு முதலில் உள்ளே நுழைய கூடவே செந்திலும்.

"வா பாலா! என்ன இவ்ளோ லேட்....இங்க ஒருத்தி வீட்டுல இருக்கேன்னு தெரியாதா!" ஹாலில்ருந்து அதட்டினாள் ஹேமா.

"இல்லம்மா....கொஞ்சம் லேட் ஆச்சி" மெதுவாய் பாலா ஹாலுக்கு செந்திலுடன் நகர்ந்தார்.

"வாங்க சார்! வாங்க சார்!....பாலா....என்ன சும்மா நின்னுகிட்டு இருக்க...போய் சேர் கொண்டு வா.....என்னோட கம்ப்யூட்டர் சார் இவர்....செந்தில் சார் காபி......."

"பாலா....அப்படியே ஒரு காபி போட்டுட்டு வா...." சத்தமாய் கத்தினாள் ஹேமா.

Tuesday, February 12, 2013

சொர்க்க வாசல் - குட்டி கதை

"காலைல சீக்கரம் எந்திரிக்கனும்! விடிஞ்சா சொர்க்க வாசல் சீக்கரம் தூங்குடா" அதட்டினார் அப்பா 

'இந்த ஆளுக்கு இதே வேலைதான். பையன நல்லா கவனிக்க வேண்டிய வயசுல இப்படி திட்டிகிட்டு......" அம்மாவின் அதே முணுமுணுப்பு

அசதியாய் நிலாவை பார்த்துக்கொண்டு தூங்கினான் ஏழு வயது  ராமரு.

காலை 4 மணி. "டேய் ராமரு! எந்திரு எந்திரு! கோயில கூட்டம் வந்துரும்" அதே அதட்டல் அப்பாவிடமிருந்து....

கண்ணை கசக்கிக்கொண்டு இருந்த ராமரின் மூஞ்சை கழுவி நெற்றியில் நாமத்தை இட்டு பாதி வேட்டியை கட்டி விட்டு விறு விறு என கூட்டி போனார் அப்பா. அவருடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் ஓடினான் ராமர்.

கோயில் வாசலை அடைய 4:10 ஆகி விட்டது. அவசர அவரசமாக அவனை நான்காம் இடத்தில நிறுத்திவிட்டு அப்பா ஐந்தாவது இடத்தில..   

குளிரில் உடல் சிறிது நடுங்க பாதி தூக்கத்தில் ராமர் சொல்ல ஆரம்பித்தான்.  

"அய்யா! தர்மம் பண்ணுங்க! நல்லா இருக்கனும் நீங்க....அய்யா அம்மா!!! "