Tuesday, August 3, 2010

ஹைகூ கவிதைகள்

தாத்தாவின் 80 வயதிலும் வீட்டில் இளமையாய் சிரிக்கிறது
- காசி யாத்திரை தடி

"அம்மனுக்கு தாலி கட்டற நேரம்...சீக்கிரம் இந்த மாலைய வாங்கிட்டு போங்க"
- என்றாள் கோவில் வாசலில் பூ விற்கும் விதவை பெண்

அதே நிலவுதான்
- பிண வீட்டு மனதில்  சோகமாய்
- மண வீட்டு மனதில் குதுகலமாய்
- சின வீட்டு மனதில் ஆக்ரோஷமாய் காண்கிறது

முகங்கள் மறந்து விட்டன
நம்பர்கள் மட்டும் இருக்கின்றன செல் போனில்
- ஒரு முறை சந்தித்த நண்பர்கள்

- Saveena

No comments:

Post a Comment